
சண்டிகர்: மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மனோகர்லால் கட்டார் தலைமையில் பா.ஜ., – ஜே.எம்.எம்., கூட்டணி ஆட்சி நடைபெறும் அரியானா மாநிலத்தில் இந்த போராட்டம் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனால், அந்த மாநிலத்தின் பல்வேறு கிராமங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட வி.ஐ.பி.,க்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபடுவதால், உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
![]() |
இந்நிலையில், ஜின்ட் மாவட்டம் பண்டு பின்டாரா கிராமத்தில் ஜின்ட் – சோனிப்பட் சாலையில் புதிய மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு உள்ளது. பாலம் கட்டப்பட்டு 10 நாட்கள் முடிந்தும், அரசியல் தலைவர்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதால் பாலம் திறக்கப்படாமல் இருந்தது. இதைத் தொடர்ந்து கிராம மக்கள் 12 வயது சிறுமியான குஷிலகராவை வைத்து பாலத்தை திறந்துள்ளனர்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2829743