
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் புதிதாக 39,361 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 416. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 4,20,967-ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 3,05,79,106 -ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 4,11,189 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 35,968 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.
இந்தியாவில் இதுவரை 43,51,96,001 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.
Source: https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-26-07-2021-just-in-live-updates