
மாதகல் கடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 417 கிலோ கிராம் எடையுடைய கேரளா கஞ்சா இன்று காலை எட்டு முப்பது மணி அளவில் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
காங்கேசன்துறை கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது குறித்த கஞ்சா பொதிகள் கடலில் மறைத்து வைக்கப்பட்டதை அவதானித்த நிலையில் அவற்றினை மீட்டுள்ளனர்.
எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவுமில்லை, இதனை மறைத்து வைத்தது யார் என்று கண்டுபிடிக்கப்படவுமில்லை.
Source: https://tamilwin.com/article/417-kg-of-kerala-cannabis-recovered-in-a-month-1627467302