
இலங்கையில் 12 வயதைத் தாண்டிய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாடு அரசு அறிவித்துள்ளது.
கொழும்பு,
இலங்கையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அங்கு 30 வயதைக் கடந்தவர்களுக்கு சீனாவின் ‘சினோஃபார்ம்’ தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இது தவிர அஸ்ட்ரா செனகா, பைசர், ஸ்புட்னிக் வி மற்றும் மாடர்னா தடுப்பூசிகளும் இலங்கையில் பயன்பாட்டில் உள்ளன.