
கியூபெக்கில் புதர் ஒன்று தீப்பிடித்த நிலையில், பொம்மை ஒன்று எரிந்ததை தாங்கள் கண்டதாக அப்பகுதி மக்கள் தங்களிடம் கூறியதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். ஆனால், அங்கு எரிந்து கிடந்தது பொம்மை அல்ல, ஒரு பெண்! கியூபெக்கில் உள்ள Sherbrooke நகரில் இமாதம் 23ஆம் திகதி காலை 10 மணியளவில், புதர் ஒன்று தீப்பற்றி எரிவதாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கிடைக்க, அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.
அப்பகுதியிலிருந்த மக்கள், யாரோ புடவைக்கடை சிலிக்கான் பொம்மை ஒன்றிற்கு தீவைத்ததாக தெரிவித்துள்ளனர்.
தீயணைப்புத்துறை பொலிசார் உதவியுடன் அந்த பொம்மையை அங்கிருந்து அகற்றி, பொலிஸ் நிலையம் ஒன்றிலுள்ள கண்டெய்னர் ஒன்றிற்குள் போட்டு வைத்திருக்கிறார்கள்.
Source: https://news.lankasri.com/article/woman-body-sherbrooke-police-firefighters-containe-1627631883