
பெட்ரோல் – டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்தனர்.
பதிவு: ஜூலை 19, 2021 12:50 PM
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு கூடியது.இந்தநிலையில் முதல்நாளான இன்று பெட்ரோல் – டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்தனர்.
டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாதாகைகளை தங்கள் உடம்பில் கட்டியிருந்தனர். நாடாளுமன்ற நுழைவு வாயிலுக்கு வந்த அவர்கள் பெட்ரோல் – டீசல் விலை உயர்வைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.