20 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை வாட்ஸ்அப் நிறுவனம் முடக்கியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்னர் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டன.
சமூக வலைத்தளங்கள் இந்த விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று இந்திய அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில், புதிய விதிகளுக்கு உட்பட்டு, மே மாதம் 15ம் திகதி முதல் ஜூன் மாதம் 15ம் திகதிக்குள் வாட்ஸ் அப் பயனர்களின் இருபது லட்சம் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கியுள்ளது.
இது தொடர்பில் அந்த நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், தவறுகள் நடக்கும் முன்பாக அதை தடுப்பதில் கவனம் செலுத்துவதாகவும், ஒருவரின் கணக்கில் மூன்று கட்டங்களாக ஆராய்ந்து,
அதாவது பதிவு செய்தல், தகவலை அனுப்புதல் மற்றும் அதற்கான எதிர்மறையான கருத்துக்களை பெறும்போது கண்காணிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் விதிமுறைகளை மீறும் பயனாளரின் கணக்கும் முடக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.
மட்டுமின்றி தவறான 3 கோடியே 20 லட்சம் பதிவுகளை ஃபேஸ்புக் நிறுவனமும் நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: https://news.lankasri.com/article/whatsapp-company-disabled-the-accounts-1626425057