
பொதுவாக இன்றைய காலத்தில் வீடுகளிலும், வெளி இடங்களிலும் ஏற்கனவே பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை பயன்படுத்தி மீண்டும் உணவு தயாரிக்கும் வழக்கத்தை சிலர் பின்பற்றுகிறார்கள்.
இது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று தெரிந்தும் கூட இதனை பின்பற்றுகின்றனர். உண்மையில் அப்படி பயன்படுத்துவதனால் தீராத நோய் பாதிப்புகளுக்கும் ஆளாக்கிவிடும்.
அந்தவகையில் உபயோகித்த சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தலாமா? கூடாதா என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.
- அதிக வெப்பநிலையில் எண்ணெய்யை சூடுபடுத்தும்போது ப்ரீ ரேடிக்கல் என்ற நிலையை அடையும். அதே எண்ணெய்யை மீண்டும் சூடுபடுத்தும்போது ‘டோட்டல் போலார் சேர்மம்’ உருவாக வழிவகுக்கும். இந்த சேர்மம் எண்ணெய்யை பயன்படுத்துவதற்கு தகுதியற்றதாக மாற்றிவிடும்.
- இந்த சேர்மத்தில் இருக்கும் நச்சுத்தன்மை இதய நோய், உடல் பருமன், புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் கோளாறு, நீரிழிவு போன்ற நோய்களுடன் தொடர்புடையது.
- எண்ணெய் மீண்டும் மீண்டும் வெப்பமடையும்போது அதிலிருக்கும் ஊட்டச்சத்து, ரசாயன பண்புகளையும் இழந்துவிடும். டிரான்ஸ் கொழுப்பும், ப்ரீ ரேடியல் அளவும் அதிகரித்துவிடும்.
- கர்ப்பிணிகள் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் தாய் என்ன சாப்பிடுகிறாரோ அதுதான் கருவில் வளரும் குழந்தைக்கும் சென்றடையும்.
- மீண்டும் சூடுபடுத்தப்பட்ட எண்ணெய்யை பயன்படுத்துவதும், அதில் உள்ள நிறைவுற்ற கொழுப்பை உட்கொள்வதும் தாய்க்கும்- சேய்க்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த கொழுப்பை அதிகம் நுகர்ந்தால் ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்துவிடும். அதனால் கர்ப்ப காலத்தில் வழக்கத்தை விட கூடுதல் எடை அதிகரிப்பு, இதய நோய் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.
- சமையல் எண்ணெய்யை மீண்டும் சூடாக்கி பயன்படுத்தும் வழக்கத்தை பின்பற்றினால் வயிறு அல்லது தொண்டை பகுதியில் எரிச்சல் உணர்வு ஏற்படும். அசிடிட்டி பிரச்சினையும் உண்டாகும்.
Source: https://news.lankasri.com/article/can-cooking-oil-be-reused-1627367804