
ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றது.
டோக்கியோ,
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஹாக்கி போட்டிகளின் குரூப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா – நியூசிலாந்து அணிகள் இன்று மோதின. இந்திய அணி மன்பிரீத் சிங் தலைமையில் களமிறங்கியது.
போட்டி இந்திய நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு தொடங்கியது. போட்டி தொடங்கிய 6 வது நிமிடத்தில் நியூசிலாந்து வீரர் ரசல் முதல் கோல் அடித்தார். இதனை தொடர்ந்து ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் இந்திய அணி வீரர் ருபிந்தர் பால் சிங் முதல் கோல் அடித்தார். இதனால், ஆட்டத்தின் முதல் பகுதியில் 1-1 என இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.
ஆட்டத்தின் 2-வது பகுதி தொடங்கியதுமே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தனர். ஆட்டத்தின் 26 வது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்தார். இதனால், இந்திய அணியின் கோல் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்தது.
இதனை தொடர்ந்து ஆட்டத்தின் 3-வது பகுதி தொடங்கியது. ஆட்டத்தின் 33 வது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங் மீண்டும் கோல் அடித்தார். இதனால், இந்திய அணியின் கோல் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்தது.
பின்னர் போட்டியின் 43-வது நிமிடத்தில் நியூசிலாந்து வீரர் ஜோனஸ் ஒரு கோல் அடித்தார். இதனால், நியூசிலாந்து அணியின் கோல் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்தது. இதனை தொடர்ந்து ஆட்டத்தின் இறுதி பகுதியான 4-வது பகுதி நடைபெற்றது. இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தனர்.
ஆனால், இரு அணிகளும் சிறப்பான தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், 4-வது பகுதியில் எந்த வீரர்கள் கோல் அடிக்கவில்லை. இந்தியா 3 கோல்கள், நியூசிலாந்து அணி 2 கோல்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால், நியூசிலாந்தை 2-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி அபார வெற்றி பெற்றது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி பெறும் முதல் வெற்றி இதுவாகும். லீக் சுற்றில் இந்திய அணி நாளை ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.